Sunday, July 12, 2015

பணத்திற்குப் பங்காளிகள்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

நமக்கு பித்ரு பிதாமஹ பரம்பரா ப்ராப்தமும் ஸ்வயார்ஜிதமுமாக இரு வகைப்  பட்ட பணங்களுண்டு. இவற்றை கொள்பவர்கள் புத்ராதிகளும் ஜ்ஞாதிகளுமென்று நாம் நினைக்கிறோம். சாஸ்த்ரம் சொல்லுகிறது என்னவென்று பார்ப்போம்.

चत्वारो धनदायादाः धर्माग्निनृपतस्कराः ।
ज्येष्ठपुत्रावमानेन त्रयः कुप्यन्ति सोदराः ॥
catvāro dhana-dāyādāḥ dharma-agni-nṛpa-taskarāh
jyeṣṭhaputra-avamānena trayaḥ kupyanti sodarāḥ
சத்வாரோ தன-தாயாதா: தர்மாக்னி ந்ருப-தஸ்கரா:
ஜ்யேஷ்ட-புத்ராவமாநேன த்ரய: குப்யந்தி ஸோதரா:

என்கிற ச்லோகம் பிரசித்தமானது; பணத்தைக் கொள்ளை கொள்ளுமவர்கள் நால்வர்; தர்மம், அக்னி, அரசர், கள்ளர் -- ஆக இந்நால்வரும் சஹோதரர்கள். பணம் படைத்தவர்க்குப் புத்ரர்கள் என்று கொள்க. இவர்களுள் ஜ்யேஷ்ட புத்ரன் (அல்லது, ஜ்யேஷ்ட ப்ராதா) தர்மமென்பவன். யஜுர்வேதத்தில், இரண்டாவது காண்டத்தில், ஐந்தாவது ப்ரச்னத்தில்,

तस्माज्ज्येष्ठं पुत्रं धनेन निरवसाययन्ति

என்று ஓதியிருக்கையாலே ஜ்யேஷ்டபுத்ரனே தனங்கொள்ள ப்ராப்தனாகையாலே, மேலே சொன்ன ஜ்யேஷ்டனாகிய தர்ம விஷயத்தில் தனத்தை யிட்டால் மற்ற ப்ராதாக்கள் மூவரும் சீற்றம் கொள்ளாமல் சமாஹித மனஸ்கர்களாயிருப்பர்கள். பிதாவானவர் (பணம் படைத்தவர்) ஜ்யேஷ்ட புத்ரனை அவமானப்படுத்தினால் (அதாவது தர்ம விஷயத்தில் பணச் செலவு செய்யாமற்போனால் மற்ற ப்ராதாக்கள் மூவரும் (அக்னி, அரசர், கள்ளர் ஆகிய மூவரும்) சீற்றங்கொண்டு தாங்கள் துராக்ருதமாய் மேல் விழுந்து கொள்ளை கொள்ளுகிறார்கள் - என்பது இந்த ச்லோகத்தினாற் சொல்லப்படுகிறது.

இதன் கருத்து எளிதாகத் தெரியவருமன்றோ. எவனுடைய பணம் தருமத்தில் விசேஷமாக செலவிடப்படுகிறதோ அவனுக்கு விபரீதமான பீடைகள் நேரமாட்டா; தருமத்தில் கண் செலுத்தாதவனுடைய பணத்தை நெருப்பு கொள்ளை கொள்ளும்; அரசர்கள் அநேக விதமான வரிகளை விதித்துக் கொள்ளை கொள்வார்கள். கள்ளர்களும் இரவிலும் பகலிலும் புகுந்து, தெரியாமலும் தெரிந்தும் கொள்ளை கொள்வர்.

நெருப்பு கொள்ளை கொள்வதாவது -- வீடு நெருப்புப் பற்றி யெரிந்து வஸ்த்ர, பூஷண, வ்ரீஹி, தண்டுலாதிகள் நிச்சேஷமாக அழிந்து போகை. அரசர் கொள்ளை கொள்வதைப் பற்றி இக்காலத்தில் அதிகமாக எழுத அவசியமில்லையன்றோ!. ஒருவனுக்கு எத்தனை விதமான வரிகள் (சுங்கங்கள்) விதிக்கப்படுகின்றன வென்பது நம்போல்வாரிற் காட்டிலும் பணம் படைத்தார்க்கு விசேஷமாகத் தெரியும்; கள்ளர் கொள்ளை கொள்வது அனைவர்க்கும் அனுபவத்திலுள்ளது.

இந்த ச்லோகத்திற்கு -- அவரவர்கள் தருமம் செய்யவேண்டியது ஆவச்ய்கமென்று ப்ரரோசனம் செய்வதில் முக்கியமான நோக்கு.


Source:
அறுபத்து மூன்று உபன்யாசமாலை - (53) - 1954, pp. 10-11.
From my Collections.


No comments:

Post a Comment